உலகம்

நிலநடுக்கம்

நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் - டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது

Published On 2022-11-09 02:33 IST   |   Update On 2022-11-09 02:59:00 IST
  • நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
  • தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

காத்மண்டு:

நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மணிப்பூரிலும் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Tags:    

Similar News