உலகம்

கோப்பு படம்.

நேபாளத்தில் சாலை விபத்து: இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பலி

Published On 2023-08-24 05:05 GMT   |   Update On 2023-08-24 07:22 GMT
  • 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
  • 19 பேர் காயம் அடைந்துள்ளனர்

நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் காத்மாண்டில் இருந்து ஜனக்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த யாத்ரீகர்கள், டிரைவர், உதவியாளர் உள்பட 27 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சூரியாமாய் கோவில் அருகே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். 19 பேர் காயத்துடன் உயிர்தப்பினர். உயிரிழந்த 6 இந்தியர்களும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News