உலகம்

நேபாளத்தில் சோகம் - பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் பலி

Published On 2023-04-12 13:40 GMT   |   Update On 2023-04-12 13:40 GMT
  • பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • இறந்தவர்கள் பீகார் மாநிலத்தவர்கள் என்பதால் இந்திய வெளியுறவுத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளது

காத்மண்டு:

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்தின் காத்மண்டுவுக்கு 5 பேர் காரில் புறப்பட்டுச் சென்றனர். இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்த்ஹுலி மாவட்டத்தில் உள்ள மலைப்பங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிரிழந்த 4 இந்தியர்களின் உடலை மீட்பதில் சிக்கல் நிலவுவதால் நேபாள ராணுவத்தின் உதவி கேட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வெளியுறவுத்துறையிடம் நேபாள அரசு தகவல் கொடுத்துள்ளது.

Tags:    

Similar News