உலகம்
தீ விபத்து

ரஷிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து- 6 பேர் பலி

Published On 2022-04-22 09:50 GMT   |   Update On 2022-04-22 09:50 GMT
தீ விபத்து ஏற்பட்டதும் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பலர் ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து உயிர்தப்பினர்.
மாஸ்கோ:

ரஷியாவின் டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த அலுவலகத்தின் ஒரு தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பலர் ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து உயிர்தப்பினர். 

எனினும் சிலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய விமான எதிர்ப்பு அமைப்புகளின் மேம்பாட்டில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துவதாக  பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News