உலகம்
ஜோ பைடன், விளாடிமிர் புடின்

உக்ரைன் விவகாரம்: புதினுக்கு, பைடன் எச்சரிக்கை

Published On 2022-02-12 21:45 GMT   |   Update On 2022-02-13 05:37 GMT
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று பைடன், புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்:

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்தார். 



படைகளை உடனடியாக திரும்ப பெறுமாறும் புதினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அதிக மனித உயிர் இழப்புகள் ஏற்படும் என்று பைடன் குறிப்பிட்டார். 

ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்  உறுதியான பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அப்போது பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. 

எனினும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் புதின் நிலைப்பாற்றில் மாற்றம் ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்க மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News