செய்திகள்
வெளிநாட்டு பயணி

ஒமிக்ரான் அச்சுறுத்தல்- வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

Published On 2021-11-29 10:22 GMT   |   Update On 2021-11-29 12:52 GMT
ஜப்பான் நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
டோக்கியோ:

உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது. இதையடுத்து பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. இதே போல் ஜப்பான் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் ஜப்பானுக்குள் நுழைய வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என பிரதமர் புமியே கிஷிடா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News