செய்திகள்
சீன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- 5 பேர் உயிரிழப்பு
சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று எரிவாயு கசிந்து திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமுற்றனர்.#ChinaFactoryExplosion
பீஜிங்:
சீனாவில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலை ஒன்றில் வழக்கம்போல பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் திரவ எரிவாயு நிரப்பப்பட்டிருந்த டேங்கில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #ChinaFactoryExplosion
சீனாவில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலை ஒன்றில் வழக்கம்போல பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் திரவ எரிவாயு நிரப்பப்பட்டிருந்த டேங்கில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #ChinaFactoryExplosion