செய்திகள்

வங்காளதேசத்தில் தேர்தல் தகராறில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Published On 2019-03-18 21:06 IST   |   Update On 2019-03-18 21:06:00 IST
வங்காளதேசம் நாட்டில் மாவட்ட நிர்வாகங்களுக்கு இன்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது கோஷ்டி மோதலில் தேர்தல் அதிகாரி உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence
டாக்கா:

வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில், இங்குள்ள ரங்கமாட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று மாலை எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த குழுவினர் நொய்மேலி பகுதி வழியாக வந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேர்தல் அலுவலர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரங்கமாட்டி மாவட்ட போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence  
Tags:    

Similar News