செய்திகள்

ஆப்கானிஸ்தான் - ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் பலி

Published On 2019-03-14 19:33 IST   |   Update On 2019-03-14 19:33:00 IST
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #insurgentskilled
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெரோ மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த 17 கிளர்ச்சியாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistaninsurgents #insurgentskilled
Tags:    

Similar News