செய்திகள்

தென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் - 2 பேர் பலி

Published On 2019-01-20 22:33 GMT   |   Update On 2019-01-20 22:33 GMT
தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். #ChileEarthQuake
சாண்டியாகோ:

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கோகும்பாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் உள்பட 2 முதியவர்கள் இறந்தனர்.  #ChileEarthQuake
Tags:    

Similar News