செய்திகள்

மெக்சிகோ - பெட்ரோல் குழாய் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு

Published On 2019-01-19 14:33 GMT   |   Update On 2019-01-19 15:42 GMT
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
மெக்சிகோ:

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 76 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ஹிடால்கோ மாநில கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்தார்.

மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’ வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. #MexicoFire
Tags:    

Similar News