செய்திகள்

மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் - சுஷ்மா அறிவிப்பு

Published On 2019-01-13 17:33 IST   |   Update On 2019-01-13 17:33:00 IST
உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
சமர்கன்ட்: 

மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு அந்த நாடுகளுக்கு சென்று வந்தார். 

இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருநாள் பயணமாக நேற்று அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை சென்றடைந்தார். 

சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



இந்நிலையில், இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்ற மத்திய ஆசிய நாடுகளின் மாநாடு இன்று நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

சமர்கன்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானும் பங்கு பெற்றிருப்பது அளவிலா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த உஸ்பெகிஸ்தான் அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
Tags:    

Similar News