செய்திகள்

பாரிஸ் நகர பேக்கரியில் வெடி விபத்து - 4 பேர் பலி

Published On 2019-01-12 13:55 GMT   |   Update On 2019-01-12 13:55 GMT
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் எரிவாயு கசிவினால் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். #4killed #Parisblast #Parisbakeryblast
பாரிஸ்:

பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள 9-வது மாவட்டம் பகுதியில் ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீபிடித்து ஏரிந்தது.

தகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையினர் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.



காயமடைந்த சுமார் 50 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #4killed #Parisblast #Parisbakeryblast
Tags:    

Similar News