செய்திகள்

அந்தமான் தீவில் அமெரிக்க சுற்றுலா பயணி கொலை - 7 பேர் கைது

Published On 2018-11-21 08:36 GMT   |   Update On 2018-11-21 08:36 GMT
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி அந்தமான் நிகோபார் தீவில் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #AmericanTourist #NorthSentinelIslan
அந்தமான்:

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்பவர் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடந்த சனிக்கிழமையன்று உள்ளூர் மீனவர் ஒருவருடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அங்குள்ள பழங்குடியின மக்கள் கொன்றிருக்கலாம் என தெரிகிறது.



வடக்கு சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட சென்டினலிஸ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வெளியுலகம் அறியாதவர்கள் என்பதால், அன்னியர்கள் யாராவது வந்தால் அவர்களை தாக்குகிறார்கள். குறிப்பாக வில் அம்புகள் மூலம் நெருப்பை பற்ற வைத்து வெளிநபர்களை தாக்கி கொன்றுவிடுவார்கள். அதனால் அங்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் ஜான் ஆலன் அங்கு சென்றபோது தாக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் ஆலன் அந்த தீவுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்த மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #AmericanTourist #NorthSentinelIsland
Tags:    

Similar News