செய்திகள்

அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ ஜப்பான் பிரதமரை சந்தித்தார்

Published On 2018-10-06 19:32 IST   |   Update On 2018-10-06 19:36:00 IST
ஜப்பான் வந்துள்ள அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே-வை இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தார். #PompeomeetsAbe #AbemeetsPompeo
டோக்கியோ:

ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.



இந்நிலையில், இன்று டோக்கியோ நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மைக் பாம்ப்பியோ சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றிட அமெரிக்க அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஷின்சோ அபே ஆதரவு தெரிவித்தார்.

மேலும், வடகொரியா நாட்டில் கைது செய்து, சிறைக்காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டினரை விடுதலை செய்வது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிடம் பேசுமாறு இன்றைய சந்திப்பின்போது மைக் பாம்ப்பியோ-வை ஷின்சோ அபே கேட்டுக் கொண்டார். #PompeomeetsAbe #AbemeetsPompeo
Tags:    

Similar News