செய்திகள்

நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது - சுவீடன் பிரதமர் பதவி நீக்கம்

Published On 2018-09-25 22:43 GMT   |   Update On 2018-09-25 22:43 GMT
சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லாப்வென் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #StefanLofven #SwedenParliament
ஸ்டாக்ஹோம்:

சுவீடன் நாட்டின் பிரதமராக ஸ்டீபன் லாப்வென் இருந்து வந்தார். அவர் மீது அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204 ஓட்டுகளும், எதிராக 142 ஓட்டுகளும் விழுந்தன. இதையடுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ஸ்டீபன் லாப்வென் நீக்கப்பட்டார்.



அடுத்து அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக கட்சித்தலைவர்களுடன் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நார்லென் நாளை (வியாழக்கிழமை) பேச்சு நடத்துவார் என தகவல்கள் கூறுகின்றன. புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஸ்டீபன் லாப்வென், இடைக்கால பிரதமராக இருப்பார் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News