செய்திகள்

சீனாவில் வரலாற்று புதுமை செய்த வாடிகன் - தேவாலயங்களுக்கு பிஷப்புகளை நியமித்து உத்தரவு

Published On 2018-09-23 17:29 IST   |   Update On 2018-09-23 17:29:00 IST
கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் இயங்கும் தேவாலயங்களுக்கு வாடிகன் பிஷப்புகளை நியமித்து வரலாற்று சிறப்பு மிக்க புதிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. #China #Vatican
பீஜிங்:

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான சீனா கம்யூனிச நாடாகவே அறியப்படுகிறது. இங்கு மதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிக அளவில் புத்த மதமே இங்கு பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், வாடிகன் சீனாவுடன் புதிய வரலாற்று சிறப்பு மிக்க இணைப்பை, ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு வாடிகன் நேரடியாக பிஷப்புகளை நியமித்துள்ளது.



இதன்மூலம், சீனாவுக்கும், வாடிகனுக்கும் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று வாடிகனில் இருந்து நியமிக்கப்பட்ட பிஷப்புகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சீன கத்தோலிக்க தேவாலய பிஷப், சோசியலிச நாட்டுக்கு தகுந்த வகையில் தாங்கள் நடந்துகொள்வோம் எனவும், சீன அரசின் தலைமையிலேயே செயல்படுவோம் எனவும் உறுதி அளித்துள்ளனர். #China #Vatican
Tags:    

Similar News