செய்திகள்

பிரான்சில் ‘செக்ஸ்’ வழக்கில் சிக்கிய பாதிரியார் தேவாலயத்தில் தற்கொலை

Published On 2018-09-21 06:40 GMT   |   Update On 2018-09-21 06:40 GMT
பிரான்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய பாதிரியார் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பாரீஸ்:

பிரான்சில் ரோயன் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜீன் பாப்ஸ்டிக் செபே (38).

இவர் ஒரு இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக ஆர்ச் பி‌ஷப்பிடம் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாதிரியார் செபே ரோயன் நகரில் உள்ள 23-வது புனித ஜீன் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை ரோயன் கிறிஸ்தவ திருச்சபை உறுதி செய்துள்ளது.

கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பென்சில் வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 1000 சிறுவர்-சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக 300 பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News