செய்திகள்

தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது- இந்தோனேசியாவில் புதிய உத்தரவு

Published On 2018-09-06 11:19 IST   |   Update On 2018-09-06 11:19:00 IST
இந்தோனேசியாவில் ஆட்ஜே மாகாணத்தில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Acehprovince
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணம் உள்ளது. இங்கு ‌ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

இப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. #Acehprovince
Tags:    

Similar News