செய்திகள்

பல்கேரியா பல்கலைக்கழகத்தில் இந்தி இருக்கை - சோபியா நகரில் ஜனாதிபதி முன்னிலையில் ஒப்பந்தம்

Published On 2018-09-05 10:08 GMT   |   Update On 2018-09-05 10:08 GMT
பல்கேரியா நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தில் இந்தி இருக்கை அமைக்க அங்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையொப்பமானது. #Sofiauniversity #BulgariaPresident #RamNathKovind
சோபியா:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்கேரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் சோபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி ருமேன் ராடேவ்-ஐ ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்தார்.

பல்கேரியா-இந்தியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா, அணுசக்தி மற்றும் பிறதுறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.



மேலும், பல்கேரியா தலைநகரில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் இந்தி இருக்கை அமைப்பதற்கும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. #Sofiauniversity #BulgariaPresident #RamNathKovind
Tags:    

Similar News