செய்திகள்

மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லி மீது சரமாரி தாக்குதல் - அமெரிக்க ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-07-23 14:55 GMT   |   Update On 2018-07-23 14:55 GMT
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் நடந்த தாக்குதலில் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #MumbaiAttack #DavidHeadley
மும்பை:

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹெட்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மன்னிப்பு வழங்கினால், அப்ரூவராக மாறத்தயார் எனவும் கூறினார். 

இந்தநிலையில், சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை கடந்த 8-ம் தேதி சக கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெட்லி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News