செய்திகள்
நிபாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை - அமெரிக்காவில் பினராயி விஜயனுக்கு கவுரவம்
கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கவுரவித்துள்ளது. #PinarayiVijayan #NipahVirus
நியூயார்க்:
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் சுமார் 18 பேர் மரணமடைந்தனர். பின்னர், கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நிபா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறப்பாக நடவடிக்கை எடுத்து நிபா வைரஸை கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா டீச்சர் ஆகியோருக்கு அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தியது. இதில், பினராயி விஜயன் மற்றும் சைலஜா டீச்சர் கலந்து கொண்டனர்.
அப்போது, கேரளாவில் நவீன வைராலஜி இன்ஸ்டிடியூட் அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் மற்றும் பால்டிமர் இன்ஸ்டிடியூட் தலைமை விஞ்ஞானிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள விஜயன் 18-ம் தேதி நாடு திரும்புகிறார்.