செய்திகள்

ஆட்கடத்தல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2018-06-16 09:31 GMT   |   Update On 2018-06-16 09:31 GMT
ஆட்கடத்தல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தானே மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. #HumanTrafficking #BangladeshisJailed #ThaneFleshTrade
தானே:

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின்படி ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி மாறுவேடத்தில் ஆட்களை அனுப்பி விசாரித்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்டனர்.

சட்டவிரோதமாக பெண்களைக் கடத்தி வந்து பாலியல் தொழில் செய்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த கபார் ஷபியுதீன் ஷாயிக்(48), அவரது மனைவி ஷிவாலி (36), ஷிவாலியின் சகோதரி நர்கிஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த தம்பதியரின் 11 வயது மகனை சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி காலிப் தீர்ப்பு வழங்கினார். அப்போது, கணவன் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் மூவருக்கும் தலா 26 ஆயிரம் ரூபாய அபராதமும் விதித்தார். #HumanTrafficking #BangladeshisJailed #ThaneFleshTrade

Tags:    

Similar News