செய்திகள்

வடகொரியாவில் நிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடம் - பார்வையிட சென்ற பத்திரிகையாளர் குழு

Published On 2018-05-22 14:48 IST   |   Update On 2018-05-22 15:05:00 IST
வடகொரியாவில் நிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடங்களை நேரில் பார்வையிட சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு அங்கு சென்றுள்ளது. #nuclearsite #NorthKorea
பியாங்யாங்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.



பருவநிலை மற்றும் காற்றின் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை அல்லது 25-ம் தேதிகளில் இந்த மூடுவிழா நடக்கலாம் என கூறப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என தெரியவந்துள்ளது. அதனை பார்வையிட்டு உறுதி செய்ய வெளிநாட்டு ஊடகங்களுக்கு வடகொரியா அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், ரியூட்டர்ஸ், சிஎன்என், சிபிஎஸ், ரஷியா டுடே மற்றும் சீன ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வட கொரியாவிற்கு இன்று சென்றுள்ளனர்.   #nuclearsite #NorthKorea
Tags:    

Similar News