செய்திகள்

ஆப்கன்: காபுல் நகரின் இருவேறு இடங்களில் குண்டு வெடிப்பு - 45 பேர் பலி

Published On 2017-12-28 08:03 GMT   |   Update On 2017-12-28 08:03 GMT
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 45-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #KabulBlast
காபுல்:

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள ‘ஆப்கன் வாய்ஸ்’ என்ற இடத்தில் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறிது நேர இடைவெளியில், புலே சோக்ஹிடியா பகுதியில் உள்ள தெப்யானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள, கலாச்சார மையத்தை குறிவைத்து தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் புயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #KabulBlast
Tags:    

Similar News