செய்திகள்

இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலில் 7 பாக். வீரர்கள் பலி

Published On 2016-11-14 08:57 GMT   |   Update On 2016-11-14 08:57 GMT
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பின்னிரவு இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Similar News