செய்திகள்

விரைவில் வெளியாகும் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன்

Published On 2018-01-16 11:39 IST   |   Update On 2018-01-16 11:39:00 IST
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
புதுடெல்லி:

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் கோ, அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கூகுளுடன் இணைந்து வெளியாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) என்பது 512 எம்பி முதல் 1 ஜிபி ரேம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கூகுள் இயங்குதளம் ஆகும். இந்த திட்டத்தை கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. 



குறைந்த பட்சம் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் சுத்தமான ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும்படி ஆண்ட்ராய்டு கோ வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் கூகுள் கோ, மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ, யூடியூப் கோ, கூகுள் அசிஸ்டண்ட் கோ, ஃபைல்ஸ் கோ உள்ளிட்ட செயலிகள் வழங்கப்படுகின்றன.

குவால்காம் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற சிப்செட்களை உருவாக்குவதாக ஏற்கனவே அறிவித்தன. அந்த வகையில் இவற்றில் எந்த நிறுவனத்தின் சிப்செட் முதலில் வெளியிடப்படும் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. 

ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மைக்ரோமேக்ஸ் சார்பில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வழங்கப்படவில்லை.

Similar News