செய்திகள்
7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட் அமைக்க மத்திய அரசு திட்டம்
நாடு முழுக்க சுமார் 7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியா முழுக்க சுமார் 7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஊரக பகுதிகளில் அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்கப்பட இருக்கிறது. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல். வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அரசு சேவைகளை இணையம் மூலம் பெறவும், டிஜிட்டல் வளர்ச்சியின் அங்கமாகவும் இந்த திட்டத்தின் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை அனைவரும் செலுத்தக் கூடிய விலையில் இந்த திட்டம் வழங்கும் என டெலிகாம் தலைவர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் வைபை பக்கபலமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் வைபை பயன்பாடு மந்தமான சூழலிலேயே இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க வெறும் 31,000 ஹாட்ஸ்பாட்கள் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.
இதுவே பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற நாடுகளில் முறையே 1.3 கோடி, 98 லட்சம் மற்றும் 56 லட்சம் ஹாட்ஸ்பாட்கள் இருக்கின்றன. ஆப்டிக் ஃபைபர் நெட்வௌர்க் மூலம் வைபை ஹாட்ஸ்பாட்களை அனைவருக்கும் பயன்தரும் வகையில் அமைக்க முடியும்.
அந்த வகையில், கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் பொருத்தி சீரன வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க முடியும் தற்சமயம் 75,000 GPs என்ற இலக்கு எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1 லட்சம் GPக்களை எட்டுவதை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சுந்தரராஜன் தெரிவித்தார்.
மத்திய டெலிகாம் அமைச்சகம் சார்பில் மாபெரும் வைபை சேவை வழங்குவது குறித்த விவாதத்திற்கு வெவ்வேறு மாநில அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வந்தாலும், இவற்றில் பல சேவைகளும் ஊரக பகுதிகளில் வேகமாக இருப்பதில்லை. புதிய திட்டத்தின் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை வைபை மூலம் ஊரக பகுதிகளில் வழங்க முடியும். என்றும் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்தியா முழுக்க சுமார் 7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஊரக பகுதிகளில் அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்கப்பட இருக்கிறது. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல். வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அரசு சேவைகளை இணையம் மூலம் பெறவும், டிஜிட்டல் வளர்ச்சியின் அங்கமாகவும் இந்த திட்டத்தின் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை அனைவரும் செலுத்தக் கூடிய விலையில் இந்த திட்டம் வழங்கும் என டெலிகாம் தலைவர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் வைபை பக்கபலமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் வைபை பயன்பாடு மந்தமான சூழலிலேயே இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க வெறும் 31,000 ஹாட்ஸ்பாட்கள் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.
இதுவே பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற நாடுகளில் முறையே 1.3 கோடி, 98 லட்சம் மற்றும் 56 லட்சம் ஹாட்ஸ்பாட்கள் இருக்கின்றன. ஆப்டிக் ஃபைபர் நெட்வௌர்க் மூலம் வைபை ஹாட்ஸ்பாட்களை அனைவருக்கும் பயன்தரும் வகையில் அமைக்க முடியும்.
அந்த வகையில், கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் பொருத்தி சீரன வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க முடியும் தற்சமயம் 75,000 GPs என்ற இலக்கு எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1 லட்சம் GPக்களை எட்டுவதை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சுந்தரராஜன் தெரிவித்தார்.
மத்திய டெலிகாம் அமைச்சகம் சார்பில் மாபெரும் வைபை சேவை வழங்குவது குறித்த விவாதத்திற்கு வெவ்வேறு மாநில அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வந்தாலும், இவற்றில் பல சேவைகளும் ஊரக பகுதிகளில் வேகமாக இருப்பதில்லை. புதிய திட்டத்தின் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை வைபை மூலம் ஊரக பகுதிகளில் வழங்க முடியும். என்றும் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.