தமிழ்நாடு செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி அருவி கரையிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
- மற்ற அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் சாரல் மழை எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று மாலை குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து மிகவும் அதிகரிக்க தொடங்கியதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி அருவி கரையிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து வனப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் நேற்று மாலை முதல் இன்று வரை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.