தேர்தல் ஆணையத்தில் திருடர்கள்: ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
- தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு.
- அதனால் தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.
மக்களவை எம்.பி. ஆ.ராசா சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த ஆட்சி தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது. 30 வருடங்களாக நான் எம்.பி.யாக இருக்கிறேன். PL2 தெரியுமா? PLC தெரியுமா? (நிகழ்ச்சியில் இருந்தவர்கள் பார்த்து) எதுவுமே தெரியாது.
தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு. பூத் ஸ்லிப் நம் கையில், வாக்காளர் பட்டியல் நம் கையில், ஸ்லிம் கொடுக்கிறது நம் கையில், சின்னம் கொடுக்கிறது நம் கையில்.
ஏனென்றால் ஓட்டு போடுறதில் 10 பேர் திருடர்களாக இருப்பார்கள். இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் அந்த வேலையை பார்த்தோம். தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.
தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் வந்துவிட்டார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. தேர்தல் ஆணையத்தின் திருட்டை தடுக்கத்தான் இவ்வளவு வேலை. இப்படி தடுத்துதான் முதலமைச்சராக வேண்டுமென்றால், வேண்டியதில்லை. வந்துவிடுவார்கள்.
130, 150 என இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் அது தமிழ்நாட்டுக்கான தேர்தல். இது தமிழ்நாட்டுக்கான தேர்தல் மட்டுமல்ல. இந்த தேர்தல் இந்தியாவுக்கான தேர்தல். மத்திய அரசுக்கு தற்போது மெஜாரிட்டி இல்லை. தமிழக தேர்தலில் 150 முதல் 200 தொகுதிகளை பிடித்துவிட்டால், பாராளுமன்ற தேர்தல் இல்லாமலேயே மத்திய அரசு மாறும்.
இவ்வாறு ஆ. ராசா தெரிவித்தார்.