தமிழ்நாடு செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்- வரும் அக்டோபர் 1 முதல் அமல்
- ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பொறுவார்கள் என்றும், மேலும், அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.