தமிழ்நாடு செய்திகள்
மாதவிடாய்- வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு:
கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
இதனை தொடர்ந்து வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.