தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூரில் திடீரென 100 அடி உள்வாங்கிய கடல்

Published On 2025-10-19 12:40 IST   |   Update On 2025-10-19 12:40:00 IST
  • கடலானது அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
  • பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

இந்த கோவில் கடலானது அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கோவில் கடலானது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக உள்வாங்குவதும், சில மணி நேரங்களுக்கு பின்னர் சீற்றத்துடனும் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறையில் மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News