தமிழ்நாடு செய்திகள்
இன்றுடன் ஓய்வு..! தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணைய தலைவர் பதவி
- தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது.
- தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு முடிவு.
தமிழக காவல் டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவருக்கு தீ ஆணைய தலைவர் பதவி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்தது.
தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதிதாக தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதில் சங்கர் ஜிவாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.