தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

Published On 2025-10-21 10:34 IST   |   Update On 2025-10-21 10:35:00 IST
  • பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News