தமிழ்நாடு செய்திகள்

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

Published On 2025-10-29 07:46 IST   |   Update On 2025-10-29 07:46:00 IST
  • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • வங்கக்கடலில் உருவான ‘மோன்தா’ புயலாலும் மழை பெய்தது.

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலாலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டின.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News