தமிழ்நாடு செய்திகள்

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்

Published On 2025-07-06 07:45 IST   |   Update On 2025-07-06 07:45:00 IST
  • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
  • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News