தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்- தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Published On 2025-10-22 09:16 IST   |   Update On 2025-10-22 09:16:00 IST
  • டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைப்பு வாய்ப்புள்ளது
  • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது

சென்னை:

காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

* டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

* காவிரி படுகை மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு.

* சென்னை மற்றும் புறநகரில் 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது.

* இன்று முதல் 25-ந்தேதி வரை சென்னையில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்றார். 

Tags:    

Similar News