தமிழ்நாடு செய்திகள்

சித்திரை முழு நிலவு திருவிழாவை நடத்த பாமக திட்டம்

Published On 2024-11-18 13:08 IST   |   Update On 2024-11-18 13:08:00 IST
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
  • 2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மாமல்லபுரத்தில் ஏற்கனவே நடத்திய மாநாட்டில் கலவரம் ஏற்பட்டதால் 12 ஆண்டுகள் சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் சித்திரை திருவிழா நடத்த கோரிய நிலையில் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News