தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

Published On 2025-06-09 15:36 IST   |   Update On 2025-06-09 15:36:00 IST
  • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
  • மாநிலங்களவை தேர்தலில் கமல் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது.

இந்த தேர்தல் வேட்புமனுவில் மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4, அதிமுக சார்பில் 2, சுயேட்சைகள் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

உரிய எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்படும் என கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலில் கமல் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News