மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி - மு.க.ஸ்டாலின்
- வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
- எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் ஆலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு வின்பாஸ்ட் அதிகாரிகளை வரவேற்கிறேன்.
* வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
* இந்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பங்கு உண்டு.
* வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.
* இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 40%.
* மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
* வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது.
* எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.
* இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
* சென்னை, காஞ்சி, கோவை, ஓசூரை தொடர்ந்து மோட்டார் வாகன தொழிற்கூடமாக உருவெடுக்கும் தூத்துக்குடி.
* * ஹூண்டாய், நிசான் , டாடா, பிஎம்டபிள்யூ, ஓலா போன்ற நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை தொடங்கின.
* கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திலும் வின்பாஸ்ட் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.