மயிலாடுதுறையின் மருமகன் நான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
- அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
இதையடுத்து மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
* நேற்று கொட்டும் மழையிலும் மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
* மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.
* மக்களை நேரில் சந்தித்து தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக 4 ஆண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.