தமிழ்நாடு செய்திகள்

சாத்தனூர் அணை திறப்பு: வாய்ச்சவடால் விடுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சேகர்பாபு தாக்கு

Published On 2024-12-03 15:32 IST   |   Update On 2024-12-03 15:32:00 IST
  • சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
  • புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஃபெஞ்சல் புயல் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல்தான் இருந்துள்ளது.

சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குச் சென்னை திரும்பியுள்ளது.

இதற்கு முதலமைச்சரின் போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் 5 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாகத்தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் இன்று உயிர்ச்சேதங்கள் இல்லை

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு உயிர்கள்

எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரு நாட்களில் சரிசெய்யப்படும்.

திருவண்ணாமலையில் வழக்கம்போல் கார்த்திகை மகா தீபத்திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News