தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு- அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On 2025-08-05 14:28 IST   |   Update On 2025-08-05 14:28:00 IST
  • இந்தாண்டு 33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை:

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னையில் 30 சதவீதம் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் எட்டிய நிலையில், இந்தாண்டு, 33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆ.அண்ணாதுரை, அமுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News