தமிழ்நாடு செய்திகள்

109 அடியை நெருங்கும் நீர்மட்டம்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2025-05-19 14:41 IST   |   Update On 2025-05-19 14:41:00 IST
  • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்:

தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை விரைவில் 109 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.

Tags:    

Similar News