தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,479 கனஅடியாக அதிகரிப்பு
- அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,479 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை பகுதியில் 2.4 மி.மீட்டர் மழை பெய்தது.