தமிழ்நாடு செய்திகள்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
- சில நாட்களுக்க முன்னதாக செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
- எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர் இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா சந்தித்து பேசினார். அவருடன் தம்பிதுரை எம்.பி. சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சென்றனர்.
சில நாட்களுக்க முன்னதாக செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைவது தொடர்பாக பேசியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.
பின்னர் தன்னுடன் வந்த மூத்த நிர்வாகிகளை முன்கூட்டியே தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியாக அமித்ஷா உடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்
அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்தார்.