தமிழ்நாடு செய்திகள்
null

திருச்சி, திருப்பரங்குன்றம் கோவில்களில் மகா தீபம் ஏற்றம்

Published On 2024-12-13 18:44 IST   |   Update On 2024-12-13 19:08:00 IST
  • மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறை அருள்பாளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.
  • கோயில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாளித்தார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் மலையுச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

அருணாச்சலேஸ்வரர் கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் நெய்யுடன் 300 மீட்டர் துணியாலான திரி கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

2668 அடி உயரம் கொண்ட கோவில் மலை மீது மகா தீபத்தில் ஜோதி வடிவிலான அண்ணாமலையாரை பக்தர்கள் வழிபட்டனர்.

இதற்கிடையே, திருவண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டதால் கோயில் வளாகத்தில் அர்த்தனாரீஸ்வரர் ஒரு நிமிடம் பொதுமாடத்தை சுற்றி வந்தார்.

மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறை அருள்பாளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மற்ற மலைக் கோவில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.

கோயில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாளித்தார்.

மலையுச்சியில் மகாதீபம் ஏற்றும்போது கோயில் வளாகத்தில் கொடி மரத்திற்கு முன் பெரிய அகல் விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது.

அதன்படி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் 40 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

அறுபடை வீடுகளில் முதன்மையானதான திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநாயகர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிகர நிகழ்ச்சியாக மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதுபோன்று, திருத்தணியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News