தமிழ்நாடு செய்திகள்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா

Published On 2025-10-15 19:37 IST   |   Update On 2025-10-15 19:37:00 IST
  • மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் இந்திராணி கணவர் கைதாகி ஜாமீனில் விடுதலை.
  • 5 மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் இந்திராணியின் கணவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News