தமிழ்நாடு செய்திகள்
சொத்து வரிகளை செலுத்த சிறப்பு சலுகை அறிவித்த மதுரை மாநகராட்சி
- ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
- அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை சிறப்பு சலுகை வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏற்படுத்தும் என்றும், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.